இலங்கை வங்கியானது நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை சூழலுக்கு இசைவான பசுமைத் திட்டங்கள் குறித்துச் சிந்திப்பதற்கு ஊக்குவிக்கும் நோக்கில் 6-18 வரையான வயதினர்க்கான ‘இலங்கை வங்கி ஹரித்த கெகுளு’ எனும் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கணக்கானது சூழலுக்கிசைவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வைப்புகள் யாவும் பேண்தகு அபிவிருத்திக் கருத்திட்டங்களில் மாத்திரம் முதலிடப்படுகின்றன.
இலங்கை வங்கி ஹரித்த கெகுளு’ கணக்கை இன்றே தொடங்குவதன்மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு பொருளாதார வலுவும் சூழற் பாதுகாப்புமிக்க எதிர்காலம் ஒன்றை அமைத்துக் கொடுத்திடுங்கள்.
அம்சங்கள்
- சாதாரண சேமிப்பு கணக்குகளை விட 1.5% அதிக வட்டி விகிதம்
- கணக்குரிமையாளருக்கு மருத்துவக் காப்புறுதி
- கணக்குத் திறக்கும் பெற்றோர் / பாதுகாவலருக்கான ஆயுட் காப்புறுதி
- தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குப் புலமைப்பரிசில்கள்
- கணக்கு மீதிகள் மற்றும் பரிவர்த்தனைகளைக் காண மின்னணுக் கூற்றும் ஸ்மாட் பாஸ்புக் வசதியும்
- இலவச SMS அறிவுறுத்தல்கள்
*இந்த நன்மைகள் வங்கியால் அவ்வப்போது குறிப்பிடப்படும் குறித்தவொரு காலத்திற்கு மட்டும் வழங்கப்படும்.

