"BOC இ-துரு பசுமைச் சேமிப்புக் கணக்கு" என்பது தனிநபர்களும் நிறுவனங்களும் தமது சேமிப்புகளுக்கான அதிகபட்ச நன்மைகளைப் பெற்றவாறே சூழலுக்கிசைவான முன்முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்கு உதவும் வகையில் இலங்கை வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான வைப்புத் திட்டமாகும்.  
இக்கணக்கானது சூழலுக்கிசைவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் வைப்புகள் யாவும் பேண்தகு அபிவிருத்திக் கருத்திட்டங்களில் மாத்திரம் முதலிடப்படுகின்றன.

அம்சங்கள்

  • வைப்புக்கு 2% என்ற ஆண்டு வட்டி வீதம் (வட்டி வீதங்கள் மாறக்கூடியவை)
  • இ – வணிக வசதி
  • இலவச SMSஅறிவுறுத்தல் வசதி
  • B App / ஸ்மாட் இணைய வங்கி வசதி
     
விசேட நன்மைகள்
  • இலங்கை வங்கியால் நிதியளிக்கப்படும் சூரிய சக்தி அமைப்பு, உயிர் வளி, இ-சைக்கிள் முதலான கடன் திட்டங்களுக்கான வட்டி வீதங்களில் சலுகை வழங்குவதற்குப் பரிசீலித்தல்.
  • பேண்தகு அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக விசேட பசுமைச் சான்றிதழ் வழங்குதல்
     
தகுதிகள்

தனிநபர் – இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள். தனிப்பட்ட கணக்குகளோ கூட்டுக் கணக்குகளோ திறக்கப்படலாம்.

நிறுவனங்கள் – இலங்கையில் முறைப்படி பதிவுசெய்துள்ள நிறுவனங்கள் (சங்கங்கள், நிறுவனச் சபைகள்) 
 

விதிகளும் நிபந்தனைகளும்
  • கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும்  மாற்றும், திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது.
  • அண்மைத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகள், நிபந்தனைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உங்கள் அருகிலுள்ள BOC கிளையை நாடுங்கள் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.  
     

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444