BOC ப்ரெஸ்டீஜ் பிளஸ் தனிப்பட்ட நடைமுறைக் கணக்கானது தொழில் வல்லுநர்கள், வேலைப்பளுமிக்க நிர்வாகிகளின் பரந்துபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு பல வசதிகளையும் நன்மைகளையும் வழங்குகிறது.

வைப்புத் தேவைப்பாடுகள்

  • ஆரம்பவைப்பு ரூ. 30,000/-
  • குறைந்தபட்சகணக்குமீதி ரூ. 10,000/-

 

நன்மைகள்

  • வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப சிறப்பாகவடிவமைக்கப்பட்ட காசோலைப் புத்தகம்
  • கடன் அட்டைக்கான இணைவுக்கட்டணம்இல்லை.குறைந்தபட்சம் ரூ. 100,000/- கடன்எல்லை
  • விமானப் பயணச்சீட்டுகளைBOC டிரவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டில்மிகவும்சிறப்புவிலையில்பெற்றுக்கொள்ளமுடியும்.
  • BOC ஸ்மார்ட்இணையவங்கிவசதிமற்றும்B App வசதி 
  • ஸ்மாட் பாஸ்புக் மற்றும்எஸ்எம்எஸ்அறிவுறுத்தற் சேவை.
  • வீட்டுக் கடன்கள்,தனிநபர்கடன்கள், குத்தகை வசதிகள் போன்றவற்றைமிக எளிய விதிமுறைகளில் கீழ் பெற்றுக்கொள்ளலாம். 
தகுதி

கணக்கைத் திறப்பதற்கான தகுதி

  • தொழில் வல்லுநர்கள் - ஏதேனும் நிறுவனத்தில் தொழில் புருபவர்கள்அல்லதுசுயதொழில்செய்பவர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள்,கட்டடக்கலைஞர்கள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போன்றவர்கள்) 
  • புகழ்பெற்ற தனியார் நிறுவனங்கள்அல்லதுகம்பனிகளில் பணிபுரியும் நிர்வாகிகள்
  • அரச அல்லது அரச சார்புநிறுவனங்களின்அதிகாரிகள்(மாதாந்தமொத்தவருமானம்ரூ. 40,000/-க்கு மேல்)

 

மேலதிகத் தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையைத் தொடர்புகொள்ளவும்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

நடைமுறைக் கணக்குத் தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள்
  1. நடைமுறைக் கணக்கை (Current Account) திறப்பதற்குத் தேவையான ஆரம்ப வைப்புத் தொகை, வங்கியின் தயாரிப்பு வகையைப் பொறுத்து மாறுபடும். ஆரம்ப வைப்புத் தொகை தொடர்பான விபரங்களை, கணக்குத் திறக்கப்படும் கிளையில் பெற்றுக்கொள்ளலாம்.
     
  2. நடைமுறைக் கணக்கு மீதி மீது வட்டி வழங்கப்படமாட்டாது.
     
  3. காசோலைப் புத்தகத்திற்கான (Cheque Book) கட்டணங்கள் நடைமுறைக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படும்.
     
  4. காசோலை மூலம் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும்; வேறு எந்த வடிவத்திலும் பணம் வழங்க மறுக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
     
  5. காசோலைகளைப் பயன்படுத்தும்போது  கணக்குரிமையாளர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்:
    - அங்கீகரிக்கப்படாத நபரெவரும் காசோலைப் புத்தகங்களை அணுக அனுமதித்தலாகாது. வழங்கப்பட்ட காசோலைப் புத்தகங்களைக் கணக்குரிமையாளர் கவனக்குறைவாகக் கையாண்டமையின் காரணமாக போலியாக கையொப்பமிடபட்ட காசோலைகளுக்குப் பணம் செலுத்தப்பட்டால்  அதற்கு வங்கி பொறுப்பேற்காது.
    - காசோலையில் இடப்படும் கையொப்பம்/கையொப்பங்களும் வங்கியில் பேணப்படும் மாதிரிக் கையொப்ப அட்டையில் உள்ள மாதிரி கையொப்பமும் ஒரேமாதிரி இருத்தல் வேண்டும்.
    - காசோலையை வழங்கும்போது, தொகையை ஒரே மொழியில் சொற்களிலும் எண்களிலும் தெளிவாக எழுத வேண்டும்; பின்னர் எண்கள் அல்லது வார்த்தைகளை சேர்க்க இடமளிக்கும் வகையில் இடைவெளி விடலாகாது.
    - காசோலையில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரரின் முழுமையான கையொப்பத்துடன் அத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
    - முன்வைக்கும் திகதியிலிருந்து 06 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பழைய திகதியிட்ட காசோலைகளுக்கு வங்கி பணம் வழங்க மறுக்கக் கூடும்.
    - கணக்குரிமையாருக்கு வழங்கப்பட்ட காசோலைத் தாள் அல்லது காசோலைப் புத்தகம் தொலைந்துவிட்டால், உடனடியாகக் கிளைக்கு அறிவிக்க வேண்டும்.
     
  6. பணமாக்கப்படாத விளைவுகளுக்கு (Unrealized Effects) எதிராக காசோலைகளுக்கு பணம் வழங்கும் கடப்பாடு வங்கிக்கு இல்லை.
     
  7. வங்கியுடன் முன்கூட்டியே ஏற்பாடுகளை  மேற்கொள்ளாது கணக்குரிமையாளர் கணக்கில் இருக்கும் மீதியை அதிகரித்தலாகாது.
     
  8. இந்த விதிகளை மீறி அல்லது வங்கி அவ்வப்போது வங்கி விதிக்கும் வேறு விதிகளுக்கு மாறாக வழங்கப்படும் காசோலைகளுக்கு பணம் செலுத்த மறுக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
     
  9. காசோலை வைப்புகள்/கணக்குக்கான வரவுகள் பணமாக்கப்படவில்லை என்று அல்லது தவறுதலாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று தெரியவந்தால், அத்தகைய பணமாக்கப்படாத காசோலைகள்/ கணக்குக்கான வரவுகள் தொடர்பான வரவு​களைத் திரும்பப் பெறும் உரிமை வங்கிக்கு உண்டு.
     
  10. கணக்குத் திறக்கும்போது கணக்குரிமையாளர் தேர்ந்தெடுத்த முறைக்கும் காலத்திற்கும் அமைவாக வங்கி கணக்குக் கூற்றை வழங்கும் கணக்குரிமையாளர் கூற்றிலுள்ள விவரங்களைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்பதோடு அதில் ஏதேனும் பிழை அல்லது முரண்பாடு இருப்பின் அதனை கூற்று வழங்கப்பட்டு 14 நாட்களுக்குள் வங்கியின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
     
  11. கணக்கைச் செயற்படுத்தும்போது வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளவாறு தேவைப்படும்போது தரகுகள், கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை வங்கி மாற்றும்.
     
  12. கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டால் காசோலைகள் பணம் செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படும்.
     
  13. 730 நாட்கள் (02 ஆண்டுகள்) அல்லது அதற்கு மேல் வாடிக்கையாளரால் தொடங்கப்பட்ட பற்றுக் கொடுக்கல் வாங்கல்கள் (Debit Transactions) பற்றிய பதிவுகள் எவற்றையும் கொண்டிராத கணக்குகள், செயலற்ற நடைமுறைக் கணக்குகளாக (Dormant Current Accounts) கருதப்படும்.
     
  14. வங்கி தனது இணையத்தளத்தில் (www.boc.lk) அறிவித்த பின்னர் கணக்குப் பராமரிப்பு தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றலாம், திருத்தலாம் அல்லது சேர்க்கலாம். இந்த அறிவித்தல்கள் வாடிக்கையாளர்களுக்கான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களாகக் கருதப்படும்.
     
  15. அண்மைத் தகவல்கள் மற்றும் தற்போதுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்துகொள்ள அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும் அல்லது 1975 என்ற எண்ணின் ஊடாக வங்கியின் அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444