ஒரு கல்விக்கூடமாகவும் பொதுமக்கள் தொடர்புக் கருவியாகயும் செயற்படும் வகையில் இலங்கை வங்கியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பணம் மற்றும் வங்கியியல் அருங்காட்சியகம் கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் 28ஆவது மாடியில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகம் பல நவீன கட்டடக்கலை எண்ணக்கருக்களையும் வடிவமைப்பு எண்ணக்கருக்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் வடிவமைப்பும் இதே போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகிறது. நாட்டில் உள்ள மிக நவீன அருங்காட்சியகங்களில் ஒன்றாக இலங்கை வங்கியின் அருங்காட்சியகத்தையும் குறிப்பிடலாம். இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத "பாடசாலைச் சுற்றுலா" அனுபவத்தை உருவாக்கும். குறிப்பாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணயங்கள் வரலாறு தொடர்பான எமது தேடலைத் தூண்டுவிடும் என்பதோடு சராசரி சுதேசிகளும் (இவ்வாறுதான் அப்போது நாம் அறியப்பட்டிருந்தோம்) அனுபவிக்கும்படி இவ்வாறனவொரு நவீன வங்கிச் சேவையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த எமது வங்கியியல் முன்னோடிகளின் தொலைநோக்கு, தைரியம் குறித்த பிரமிப்பையும் உருவாக்கும்.
முக்கியமாக வருடாந்த பாடசாலைச் சுற்றுலாக்களின் ஒரு பகுதியாக இலங்கை வங்கி கட்டடத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இவ்வருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. (இலங்கை வங்கியின் தலைமை அலுவலகம் பாடசாலை மாணவர்கள் பார்வையிடும் பல இடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் அருங்காட்சியகம், அதே தளத்தில் உள்ள காட்சிக்கூடம்/மாடம், "காசி தோரணம்" என்று குறிப்பிடப்படும் முதலாம் மாடியில் உள்ள சிற்பம், இலங்கை வங்கியின் திறைசேரிப் பிரிவின் வணிகர்கள் கணினிக் கட்டுப்பாட்டு முனையங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் Dealing Room எனப்படும் பகுதி என்பன குறிப்பிடத்தக்கது)
அருங்காட்சியகமும் அதன் சுற்றுப்புறமும் பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளன
அருங்காட்சியகத்தைப் பார்வையிடல்
அருங்காட்சியகம் எந்நேரமும் திறந்து வைக்கப்படுவதில்லை என்பதால் பார்வையாளர்கள் வருவதற்கு முன்னர் கீழேயுள்ள முகவரிக்கு கோரிக்கைக கடிதம் ஒன்றை அனுப்பி முன்னனுமதி பெறவேண்டும்.
அருங்காட்சியகக் காப்பாளர்,
அருங்காட்சியக அலுவலகம், 30ஆம் மாடி, இலங்கை வங்கித் தலைமையகம், இலங்கை வங்கிச் சதுக்கம், இல. 01, இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
அருங்காட்சியகத்திற்கு வருவதற்கு உத்தேசித்துள்ள திகதிக்கு முன்பே கடிதம் அனுப்பப்பட வேண்டும் அல்லது முன்பதிவு கோரிக்கைப் படிவத்தை நிரப்புவதன் மூலம் நேரடியாக அனுமதி கோரலாம். பாடசாலை மாணவர்கள் எனின் அனுமதி வழங்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டவுடன், வருகை தரும் மாணவர்களின் அனைவரது முழுப் பெயர்களையும் சரியாகக் குறிப்பிட்டு பட்டியல் ஒன்றை அனுப்ப வேண்டும். இலங்கை வங்கியின் பல்வேறு பரிசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படக்கூடிய ஏதேனும் சிறப்புப் பரிசுகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கே இவ்வாறான பெயர்ப்ட்டியல் கோரப்படுகின்றது.
கோரிக்கைக் கடிதத்தில் திறந்த வெளி மாடத்திலிருந்து பார்ப்பதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தால் மட்டுமே திறந்த வெளி மாடத்திற்கு அனுமதி வழங்கப்படும். அருங்காட்சியகம் மற்றும் திறந்த வெளி மாடம் ஆகிய அனைத்தும் உயர் பாதுகாப்புப் பகுதியாக கருதப்படுவதால் அனுமதி வழங்குவது முற்றிலும் இலங்கை வங்கியின் தற்றுணிபுக்கு உட்பட்டது என்பதோடு எவ்விதக் காரணத்தையும் கூறாமல் அனுமதி மறுக்கும் உரிமையும் வங்கிக்கு உண்டு.
அருங்காட்சியகத்திற்குள் சாதாரணமாக 50 நபர்களே அனுமதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கைக்கு அதிகமான குழுக்கள் ஆகக்கூடியது 55 நபர்களைக் கொண்ட குழுக்களாகப் பிரித்து அருங்காட்சியகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவர். ஆகப் பெரிய குழுக்களுக்கான அனுமதி (பெரும்பாலும்) மறுக்கப்படலாம் என்பதை நினைவிற்கொள்க.
வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள்/பாதுகாவலர்கள் கவனமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வங்கி உறுதியாக இருப்பதால் அனுமதி கோரும் பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களுடன் வரும் ஆசிரியர்கள்/பாதுகாவலர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும்.
பிரதான தொடர்பு விபரங்கள்
தொடர்புகளுக்கு
அருங்காட்சியகக் காப்பாளர்,
அருங்காட்சியக அலுவலகம்,
30ஆம் மாடி,
இலங்கை வங்கித் தலைமையகம்,
இலங்கை வங்கிச் சதுக்கம்,
இல. 01, இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு 01.
தொலைபேசி: 0112205335 / 011 220 5336
தொலைநகல்: 011 232 1160
மின்னஞ்சல்: museum@boc.lk